தடை செய்யப்பட்ட போதை மாத்திரங்களுடன் கைது

கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்பிரிவினருடன் இனைந்து 2019 ஜூன் 15ம் திகதி புல்முடை ஜின்னபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புல்முடை பொலிஸ் அதிரடிப்பிரிவின் அதிகாரிகளுடன் இனைந்து புல்முடை ஜின்னபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது 27 ப்ரிகெபலின் (Pregabalin) போதை மாத்திரகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த போதை மாத்திரங்கள் சட்டவிரோதமாக விநியோகிக்க முச்சக்கர வண்டியின் மூலம் கொண்டு செல்லும் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 45 வயதான புல்முடை ஜின்னபுரம் பிரதேசத்தில் வசிப்பவர்களாக அடையாலம் காணப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மற்றும் போதை மாத்திரங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்முடை பொலிஸ் நிலையத்திற்க்கு ஒப்படைக்கப்பட்டன.

அதும்டுமல்லாது கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2019 ஜூன் 14 திருகோணமலை லிங்கநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது ப்ரிகெசிம் (Pregazim) 130 போதை மாத்திரங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.