சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படையினர் வழங்கிய தகவலின் படி கலமெடிய வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரிகளினால் இன்று (ஏப்ரில் 07) அம்பாந்தோட்டை கஹதா மோதர பகுதியில் வைத்து சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன. அங்கு அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்த வெவ்வேறு வகைகளில் 184 சங்கு சிப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் அம்பாந்தோட்டை கஹதா மோதர பகுதியில் வசிக்கும் 49 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர் மற்றும் சட்டவிரோத சங்கு சிப்பிகள் மேலதிக விசாரணைக்காக வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.