இந்திய கடற்படைக்கு சொந்தமான “கோரா த்வு” எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இந்திய கடற்படையின் “கோரா த்வு” கப்பல் இன்று (ஏப்ரில் 07) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

48.9 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல், 293 டன் கொள்ளவு கொன்டுள்ளது. இக் கப்பலின் குழுவினர் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல திட்டங்களில் கழந்துகொள்வார்கள். மேலும் 61 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ள இக் கப்பல் எதிர் வரும் ஏப்ரில் 08 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளது.