2.40 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் நேற்று (ஏப்ரில் 06) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.40 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் வாய்க்கால் தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 35 வயதானவராக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகளினால் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.