புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

கொழும்பு, புளுமென்டல் குப்பைமேட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக இன்று (ஏப்ரில் 06) முடிவுக்கு கொண்டு வந்தனர். ஏற்பட்ட தீ அனர்த்தம் பற்றி இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளைக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின் குறித்த கட்டளையின் வீர்ர்களிலால் இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினரின் 09 வீர்ர்களுடன் ஒரு தீ அனைப்பு வாகனம், ஒரு தண்ணீர் பவுசர் கழந்துகொன்டுள்ளதுடன் குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் இராணுவம் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் தீயணைப்பு படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக தீ மேலும் பரவாது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.