சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மரதமுனை போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இனைந்து நேற்று (ஏப்பிரல் 04) நிந்தவூர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 50 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக தயாராக இருக்கும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் நிந்தவூர் பகுதியில் வசிக்கும் 39 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர் மற்றும் சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகள் மேலதிக விசாரணைக்காக மரதமுனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.