தலேஷ்வரி வங்காளம் கடற்படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

கடந்த மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள தலேஷ்வரி எனும் வங்காளம் கடற்படை கப்பல் இன்று மார்ச் 06 ஆம் திகதி வெற்றிகரமான விஜயத்தின் பின் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

அங்கு இலங்கை கடற்படையினரினால் நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது. குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொன்டனர்.