மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுக்கு கடற்படை ஆதரவு

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால் நேற்றய தினம் (மார்ச் 04) மஹா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் படி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் மிக சிறப்பாக நேற்று மற்றும் இன்றய தினங்களில் இடம்பெற்’றுள்ளன. ஆலயத்தில் இடம்பெற்’ற இந்த நிகழ்வுகளில் மன்னாரில் பல பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பக்தர்கள் குளிக்கும் இடத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்காக கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பணி பிரிவின் (4RU) கடற்படை வீர்ர்கள் கழந்துகொன்டுள்ளனர். மஹா சிவராத்திரி நிகழ்வு வெற்றி பெற கடற்படை வழங்கிய ஆதரவு பற்றி ஆலயத்தின் பிரதான பூசாரி உட்பட பக்தர்கள் மிகவும் பாராட்டினர்.