சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒரு வெளிநாட்டவர் கடற்படையினரினால் கைது

ரூமஸ்ஸல மலை அடிவார கடற்கரையில் (White Jungle Beach) ஈட்டி துப்பாக்கியொன்று பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒரு வெளிநாட்டவரை தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 04) கைது செய்யப்பட்டன. அங்கு அவரிடமிருந்து ஈட்டி துப்பாக்கியொன்று மற்றும் பிடித்துள்ள மீன்களும் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டது.

குறித்த வெளிநாட்டவர் உக்ரைன் நாட்டில் சேர்ந்த 53 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர் , ஈட்டி துப்பாக்கி மற்றும் பிடிக்கப்பட்ட மீன்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி, மீன்வள மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.