இந்திய-பசிபிக் பிரதிநிதிகளின் ஒரு குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்த இந்திய பசிபிக் ஒத்துழைப்பு தலைமையின் பிரதிநிதி எயார் கொமடோர் ரிசட் டேவிட் ஓவன் உட்பட பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் நேற்று (பெப்ரவரி 07) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

மேலும் இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் கடற்படை தளபதி அவர்களினால் எயார் கொமடோர் ரிசட் டேவிட் ஓவன் அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்தில் இந்திய பசிபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் பிரதானி திருமதி கேட்லின் ஜேன்சன் அவர்களும் கழந்துகொன்டுள்ளார்.