கடற்படை உறிப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் பண நன்கொடை

பிரஞ்சு கடற்படையின் பொறியியல் பிரிவின் பணியாற்றும் போது இறந்த கில்டன் கோஷியன் அதிகாரிவுடய மனைவியான அமெரிக்காவில் குடியேறி இருக்கும் அயங்கா கோஷியன் அவர்கள் மற்றும் குழந்தைகளினால் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

அதன் படி குறித்த பணம் ஒப்படைப்பு நிகழ்வு கடந்த பெப்ருவரி 01 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா மற்றும் அயங்கா கோஷியன் ஆகியோரின் தலைமையில் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் இன் நிகழ்வுக்காக திருமதி கோஷியன் அவர்களின் பிள்ளைகளான தினேஷ் கோஷியன், நிரன்ஜலி கோஷியன், துலான்ஜலி கோஷியன் மற்றும் கடற்படை காலாட்படைப் பிரிவின் தளபதி மற்றும் இயக்குனர் கடற்படை மரைன் ரியல் அட்மிரல் உதேனி சேரசிங்க ஆகியவர்கள் உட்பட கடற்படையின் மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.

மேலும் ஒரு இலங்கை பெண்னாகிய திருமதி அயங்கா கோஷியான் அவர்கள் பிறந்த நாட்டுக்காக செய்யப்பட வேண்டிய ஒரு கடமை என குறித்து தங்கள் நாட்டில் பாதுகாக்கும் கடற்படையினரின் பிள்ளைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டது. அதன் படி இந்த பணத்தை இலங்கை கடற்படை உறிப்பினர்களின் பிள்ளைகளின் கல்வி நோக்கங்களுக்காக ஒரு உதவித்தொகையாக வழங்க கடற்படை சேவா வனிதா பிரிவு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றது.