கைப்பற்றப்பட்ட 13 இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
 

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 13 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (ஜனவரி 26) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன. இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இப்படகுகள் கைப்பற்றப்பட்டது.

இன்று மாலை குறித்த படகுகள் காங்கேசன்துறைக்கு வடக்கே சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவற்படையின் அமேயா கப்பலிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் கடந்த தினங்களில் இந்திய பொறியாளர்களினால் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார மற்றும் நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனங்களிலும் கிரன்சி முகாமில் வைத்து பழுதுபார்க்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.