ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு பிரய்ஸ் ஹசீஸன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை இன்று (ஜனவரி 14) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். அங்கு ஹசீஸன் அவர்கள் முதலில் இலங்கை கடற்படையின் 23 வது புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகர் குருப் கேப்டன் ஷோன் அன்வின் அவர்களும் கழந்துகொன்டார்.