இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரினால் கைது
 

இலங்கை கடற்படை நேற்று (ஜனவரி 12) மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் மற்றும் அவர்களின் 03 படகுகள் கைது செய்யப்பட்டது.

அதன் படி நெடுந்தீவு பகுதி கடலில் 02 படகுகள் மற்றும் 09 மீனவர்களும் தலைமன்னார் கடல் பகுதியில் ஒரு படகு மற்றும் 11 மீனவர்களும் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கு மற்றும் நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த பகுதிகளில் கடற்றொழில் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.