புதிய கடற்படைத் தளபதி பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் இன்று (ஜனவரி,07) பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களை சந்தித்தார்.

பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அவர்களிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.