ஹுராவி’ நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றது
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த மாலைதீவு கடலோர பாதுகாப்புப்படை கப்பலான ‘ஹுராவி’ இன்று (ஜூலை, 09) அதன் அடுத்த துறைமுகத்திற்கு தனது பயணத்தை மேற்கொள்கிறது. கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி பிரியாவிடையளிக்கப்பட்டது.மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொன்டு வருகைதந்த குறித்த கப்பல் இம்மாதம் (ஜூலை) 07ஆம் திகதி நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.