காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் நேற்று (ஜூன் 21) உதவியளித்துள்ளனர்.

பேருவல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கை களுக்காக புரப்பட்ட நலின் 09 எனும் படகில் பயனித்த ஒரு மீனவருக்கு காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக,  இலங்கை கடலோர காவல்படையின் சுரக்‌ஷா கப்பல் மற்றும் தென் கடற்படை கட்டளையின் பி 450 விரைவு தாக்குதல் கப்பல்கள் கடலுக்கு புறப்பட்டுள்ளது. அதன் பிரகாரமாக காலி, கலங்கரை விளக்கத்துக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் இருந்து குறித்த மீனவரை பாதுகாப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.