இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஆய்வுப் பயணமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இன்று (மே 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார். அங்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளித்து அவரை வரவேற்கப்பட்டது.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மேலும் இன் நிகழ்வுக்காக இலங்கையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அஷோக் அவர்கள் உட்பட கடற்படை தலைமையகத்தில் மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.