சர்வதேச கடல்சார் சட்டம் பற்றிய விழிப்புணர்வு திட்டம்
 

சட்டவிரோத மீன்பிடித்தல், குடியேறுபவர்கள், கடல்சார் சட்டம் மற்றும் அதன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்படை ஊழியர்களுக்கான விழிப்புணர்வு திட்டமொன்று கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் விரிவுரைகள் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் துனை சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பன்டார உட்பட மூத்த சட்ட அலுவலர்களால் நடத்தப்பட்டன.

அங்கு கடற்படை ஊழியர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவது பற்றி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இன் நிகழ்வுக்காக கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் தளபதி கச்சப போல் அவர்கள் உட்பட பல நிறுவனங்கள், கப்பல்கள் மற்றும் படகுகள் பிரதிநிதித்தி சுமார் 50 அதிகாரிகள் கழந்துகொன்டனர்