14 ம் ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை நிரந்தர கடற்படையின் 14 ம் ஆட்சேர்ப்பு பிரிவின் 33 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (நவம்பர் 08) வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷிலா நிருவனம் கீழ் பராமரிக்கப்படுகின்றன கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் குறித்த அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மேற்கு கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. சிறந்த பயிட்சியாளருக்கான விருதை எச்.பீ.எம் சமன்பிடிய பெற்றார் டி.ஜி.எஸ் கனிஷ்க சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் ஜி,எஸ் அபேசிங்க சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதை வென்றார்.

ஒரு வண்ணமயமான கலாச்சார நிகழ்வுகள் கொன்டுள்ள குறித்த அணிவகுப்புக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர் உட்பட மற்ற மத குருமார்கள், கடற்படை தலைமையகத்தின் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.