வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பின் இந்திய கப்பல்கள் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண மற்றும் பயிற்ச்சி விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான தீர், சுஜாதா மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் சாரதி எனும் கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 06) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்களை அனுப்பிவைத்தனர்.

05 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு வந்தடைந்துள்ள குறித்த கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர். மேலும் இக் கப்பல்களில் இசை குழுவினர்கள் மற்றும் இலங்கை கடற்படை இசைக்குழு ஒன்றாக இணைந்து நேற்று (நவமபர் 05) கொழும்பு காலி முகம் மைதானத்தில் வண்ணமயமான இசை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது.