கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெறும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இன்று (ஒக்டோபர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர்.

அங்கு, அவர்கள் இடையில் இரண்டு கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு மற்றும் நட்பை அதிகரித்தல் பற்றி மற்றும் கடல் பாதுகாப்பை நிறுவுவது உட்பட சில முக்கியமான கருத்துகள் பற்றி கலந்துரையாடபட்டன.

அதின் பிரகாரமாக முதலில் கடற்படை தளபதியவர்கள் ஆஸ்திரேலிய ரோயல் கடற்படை கொடிவரிசை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஸ்டுவட் மேயர் அவர்களை சந்தித்தார். இச் சந்திப்பு காலி முகத் ஹோட்டலில் நடைபெற்றத்தக குறிப்பிடத்தக்கது. அதின் பிரகு நைஜீரிய கடற்படை நிருவாக இயக்குனரான ரியர் அட்மிரல் எஸ்,கே அடேபரி அவர்களை மற்றும் ஐக்கிய அமெரிக்க கடற்படை பசிபிக் பகுதி கொடிவரிசை கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்கொட் எச் ஸ்விப்ட் அவர்களையும் சந்தித்தார்.

மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தலுக்கு மிகவும் முக்கியமான புதிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை உலகம் முழுவதும் பரவி இருக்கும் கடல்சார் நிபுணர்கள் மற்றும் கடற்படை மூலோபாயம் இயற்றுபவர்கள் விவாதிக்க இந் கருத்தரங்கு முலம் சிறந்த வாய்ப்பை வழங்கியதுக்காக அவர்கள் கடற்படைத் தளபதியவர்களுக்கு தமது நன்றியை வெளிப்படுத்தியவுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கடற்படைத் தளபதி ஆஸ்திரேலிய ரோயல் கடற்படை கொடிவரிசை கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதி நைஜீரிய கடற்படை நிருவாக இயக்குனருடன் சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதி ஐக்கிய அமெரிக்க கடற்படை பசிபிக் பகுதி கொடிவரிசை கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு