பாக்கிஸ்தான் “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த பாக்கிஸ்தான் கடற்படையின் “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று(05) சந்தித்தனர்.

இரு கப்பலில் கட்டளை அதிகாரிகளான கொமான்டர் அஷ்பார்க் அலி அவர்கள் மற்றும் கொமான்டர் ஹமீட் சுல்தான் அவர்கள் கடற்படை தளபதியை சந்தித்து நட்பாக பேசினார்கள். இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.