ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படை உதவி
 

மீன் பிடித்ததற்காக நீர்கொழும்பு பிரதேசத்தில் கடலுக்கு சென்ற “அமித் புதா” மீன்பிடி படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க நேற்று (11) மாலை கடற்படை உதவியளித்தது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அறிவித்தலின் படி உடனடியாகக், கடற்படை வீரர்கள் பீ 4443 வேக தாக்குதல் படகில் கடலுக்கு சென்றார்கள். கொழும்பு துறைமுகத்தில் சுமார் 8 கடல் மைல்கள் தூரத்தில் இருந்து கொழும்பு கடற்படை கப்பல் ரங்கலைக்கு நோயாளி கொண்டுவந்து முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.