5.0 கிலோக்ராம் தங்கத்துடன் இருவர் கடற்படையினரால் கைது
 

நேற்று மாலை (06) மீன்பிடி படகு மூலம் 5.0 கிலோக்ராம் தங்கத்தை இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முயற்சி செய்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் போன்று வேடமிட்டு 5.0 கிலோக்ராம் தங்கத்தை மீன்பிடி படகு மூலம் கடத்திச் செல்ல முற்பட்ட வேளையில் குறித்த சந்தேக நபர்கள் தலைமன்னார் மேற்கு பிரதேச கடலில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மன்னார் மற்றும் சிலாவதுர பிரதேசத்தில் குடியிருப்பாளர்கள்

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களுக்கு கிடைக்கப்பட்ட புலானாய்வு தகவலுக்கமைய கடற்படை வீர்ரகள் பீ 223அதி விரைவு தாக்குதல் படகில் மேற்படி நடவடிக்கைகள் எடுக்கபட்டனர். அப்போ மீன்பிடி படகில் ஒளித்துவைத்த 5.0 கிலோக்ராம் தங்கத்தை கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட 5.0 கிலோக்ராம் தங்கத்தயும் யாழ் சுங்க அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.