கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வவுனியா மற்றும் நொச்சியாகமவில் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம் முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களின் நன்மை கருதி இரன்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நவம்பர் 04 திகதி திறந்து வைக்கப்பட்டது. இவ்வியந்திரங்கள் மூலமாக போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்களுக்கு நீரை சுத்திகரித்து வழங்கும். இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதி சிறுநீரக நோய் தடுத்தல் செயலணியின் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் நொச்சியாகம,மஹலிதவெவவில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரமொன்று பிரதேச மக்களின் நன்மை கருதி இன்று (06) களனி ரஜமகா விகாரையின் பிரதம தேரர் திரு பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இவ்வியந்திரத்தினால் 45 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை பெரும் வாய்ப்பு கிடத்துள்ளது. இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்கு சிரச கம்மெத்த திட்டம் ஊடாக களனி ரஜமகா விகாரையின் பிரதம தேரர் மூலம் பெற்றது.

இந்த நாட்களில், கடும் மழை கொண்டு பாதகமான வானிலை போதிலும் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மக்களுக்கு அடைய வேண்டிய சுத்தமான குடிநீர் வழங்குவதுக்கு கடுமையாக போராடி வருகின்றனர். மேலும் 42 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 16.000க்கு அதிகமான பாடசாலை மாணவர்களும் 22,300 க்கு அதிகமான குடும்பங்களும் நீர் பயனடைகிரது. இது போன்று மேலும் பல சமூக நல திட்டங்களை மேற்கொள்ள கடற்படை உத்தேசித்துள்ளது.