சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று(05) மன்னார் சவுத்பார் பிரதேச கடலில் வெடி  பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் ஒரு ரோந்து படகு, 04 தனியிழை வலைகள், 05 சுழியோடி முகமூடிகள், 04 சோடி சுழியோடி காலணிகள் மற்றும் 550 கிலோக்ராம் மீன்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகவர்களும், பொருள்களும் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.