கடற்படைத் தளபதி 'இந்திய-இலங்கை ஒத்துழைப்பு உரையாடத்தில்' கலந்துகொன்டார்.
 

இந்திய-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மறுபரிசீலனை செய்யும் நோக்குடன் நேற்று(3) நாங்காவது முறையாக கொழும்பில் இந்திய-இலங்கை ஒத்துழைப்பு உரையாடல் நடத்தப்பட்டன. பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவருடைய அழைப்பின் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜி மோகன் குமார் உட்பட இந்திய தூதுக்குழு இன்நிகழ்வில் கலந்துக்கொன்டனர். இந்த வருட உரையாடத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவரும் கலந்துகொன்டார்.

இந்த கூட்டத்தின் போது, இந்தியா மற்றும் இலங்கைத் தூதுக்குழுவின் இருதரப்பு பாதுகாப்பு விஷயங்கல் மற்றும் பல விஷயங்கல் விவாதிக்கப்பட்டது. 2012 இல் தொடங்கிய, இந்திய-இலங்கை ஒத்துழைப்பு உரையாடல் 'பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு இருவரும் முக்கிய பிரச்சினைகளை பற்றி விவாதிக்க ஆண்டுதோறும் நடைபெறும்.

இந்த உரையாடத்தில் இலங்கை இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு வய்.கே. சின்ஹா அவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரான எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் உட்பட பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.