சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் நேற்று இரன்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் கிழக்கு கடற்படை கட்டளை திருகோனமலை இலங்கை கடற்படை கப்பல் மகாவெலிவின் வீரர்களால்,கொட்பே மீன்பிடி துறைமுகம் பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் மூன்று தனியிழை வலைகள் கைப்பற்றப்பட்டன. சந்தேகவர்களும், பொருள்களும் திருகோனலை உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு கடற்படை கட்டளை பானம, இலங்கை கடற்படை கப்பல் மஹானாகவின் வீரர்களால்,பெரியமுகத்துவாரம்,திருக்கோவில் பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 2500 மீட்டர் நீளம் தனியிழை வலை கைப்பற்றப்பட்டன. சந்தேகவர்களும், பொருள்களும் திருக்கோவில் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.