சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட கிண்ணியா, கடற்படை கப்பல் கொகன்ன வின் வீரர்களால் உப்பாறு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 22) கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 2 படகுகள், 2 வலைகள், 2 சுழியோடி முகமூடிகள் மற்றும் ஒரு சோடி சுழியோடி காலணிகளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களும் பொருள்களும் திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.