வெளிச்செல்லும் விமானப்படை தளபதி, கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

வெளிச்செல்லும் விமானப்படை தளபதி எயார் மாஷல் ககன் புலத்சிங்ஹல அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 13) சந்தித்தார். வருகை தந்த முன்னாள் விமானப்படை தளபதிக்கு கடற்படை பாரம்பரியங்களுக்கமைய ஒரு மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

இச்சுமூக சந்திப்பின் போது எயார் மாஷல் புலத்சிங்ஹல தனது சேவைக்காலத்துக்குள் விமானப்படைக்கு வழங்கிய சகல விதமான ஒத்துளைப்புகளுக்கும் கடற்படை தளபதிக்கு நன்றி தெரிவித்தார். வைஸ் அட்மிரல் விஜேகுனரத்ன அவர்கள் ஒய்வு பெற்று செல்லும் விமானப்படை தளபதிக்கு ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்வை நாடி வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். இச்சந்தர்ப்பத்தை நினைவு கூறுமுகமாக நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசின்ஹ மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் இச்சந்திப்பின் போது சமூகமளித்திருந்தனர்.