சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்கள், நேற்றைய தினம்  (ஆகஸ்ட் 24) நாயாறு பிரதேசத்திற்கப்பால் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்களை கைதுசெய்தனர். அவர்களுடன் 2 கண்ணாடியிலை படகுகள், ஒரு சுளியோடும் முகமூடி, ஒரு ஜிபிஎஸ் கருவி மற்றும் ஒரு தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை ஆகியனவும்  கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்களும் பொருள்களும் முல்லைத்தீவு பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.