கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு படையினரும் இணைந்து கோபாலபுர கடலில் மூழ்கச்சென்ற மூவர் மீட்பு

நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்களும் கரையோர பாதுகாப்பு படையின் உயிர் காப்பு பிரிவினரும் இனைந்து கோபாலபுரத்திற்கு அப்பால்  கடலில் மூழ்கச்சென்ற 3 நபர்களை ஆகஸ்ட் 23 ஆம் (2016) திகதியன்று மீட்டனர். மீட்கப்பட்ட மூவரும் 21, 24 மற்றும் 28 வயதுடைய  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.