நிகழ்வு-செய்தி

அம்பன் கங்கை வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் செயல்பாட்டை கடற்படைத் தளபதி கண்காணித்தார்

சீரற்ற வானிலை காரணமாக இடிந்து விழுந்த பாலத்தை சீர்ச்செய்யும் வரை, பாடசாலை மாணவர்கள் உட்பட அப்பகுதி மக்களுக்கு அம்பன் கங்கை வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, 2025 டிசம்பர் 24, அன்று கடற்படையால் ஒரு சிறப்பு படகு சேவை தொடங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையை கடற்படைத் தளபதி 2026 ஜனவரி 10 அன்று கண்காணித்து, இவ் செயல்பாட்டை மிகவும் திறம்பட மேற்கொள்ள தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

12 Jan 2026

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் தளபதி கடற்படைத் தளபதியை சந்தித்தார்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் விஜயநாத் ஜெயவீர, இன்று (2026 ஜனவரி 09,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

09 Jan 2026

மாத்தளை, லக்கலவில் கடற்படையால் நிறுவப்பட்ட 1146 நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தின் லக்கல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள லக்சிரிபுர கிராமத்தில் நிறுவப்பட்ட (01) நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 07 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.

09 Jan 2026

நாயாறு களப்பு வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது

நிலவிய மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்த நாயாறு பாலத்தை சரிசெய்யும் வரை, அப்பகுதி மக்களுக்கு களப்பு வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக கடற்படையால் 2025 நவம்பர் 29 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு படகு சேவை 2026 ஜனவரி 06 வெற்றிகரமாக நிறைவடைந்தது.

07 Jan 2026

75வது கடற்படை ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கிழக்கு கட்டளை மருத்துவமனை வளாகத்தில் இரத்த தான நிகழ்ச்சி

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக சேவை திட்டங்களை நடத்தியதுடன், இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக சேவை முயற்சியான இரத்த தான நிகழ்ச்சி, 2026 ஜனவரி 03 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டது.

07 Jan 2026

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக 2026 ஜனவரி 06 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

06 Jan 2026

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவியது

அம்பாறையின் பானம பகுதியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்தை அன்மித்த குமண சரணாலயத்தில் நடமாடிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க கடற்படை, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2026 ஜனவரி 04, அன்று உதவி வழங்கியது.

06 Jan 2026

தித்வா புயலால் சிவனொளிபாதமலைக்குச் செல்லும் சாலையை சீர்செய்ய கடற்படை உதவியது

'தித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பொருட்டு, தீவு முழுவதும் உள்ள பாலங்கள், பாதைகள், வீடுகள், குடிநீர் கிணறுகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்து பழுதுபார்க்கும் சிறப்பு திட்டத்தை கடற்படை செயல்படுத்தியுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ், 2025 டிசம்பர் 31 அன்று சிவனொளிபாதமலைக்கு செல்லும் வழியில் மகாகிரிதம்ப பகுதியில் சேதமடைந்த படிகளை சரிசெய்ய முப்படைகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளுக்கு கடற்படை உதவிகளை வழங்கியது.

05 Jan 2026

கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட 'Rebuilding Sri Lanka' நிதிக்கு, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படைத் திணைக்களத்தில் பணியாற்றும் அனைத்து கடற்படை வீரர்களின் 2025 டிசம்பர் மாத ஒரு நாள் சம்பளத்தை கடற்படை 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வரவில் வைப்பிலிட்டது.

05 Jan 2026

பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் கடற்படை 04 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்பினாலும் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவிலும், குருநாகல் மாவட்டத்தின் அபன்பொல, கல்கமுவ மற்றும் பிங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிறுவப்பட்ட நான்கு (04) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் மக்களுக்காக கையளிக்கப்பட்டது.

02 Jan 2026