நிகழ்வு-செய்தி

75வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுக்கூடல் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைபெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கடற்படை மரபுகள் மற்றும் சர்வ மத மரபுகளுக்கு ஏற்ப தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொடரில் மாலுமிகளின் நட்புரீதியான ஒன்றுகூடல் இன்று (2025 நவம்பர் 07) வெலிசரவில் உள்ள ‘Wave N’ Lake’ கடற்படை உற்சவ மண்டபத்தில் நடைபெற்றது.

08 Nov 2025

கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமானது பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ் மாத்தளை மாவட்டத்தின் கலேவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள க/ மெதபெத்த மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 அக்டோபர் 31 அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.

04 Nov 2025

கடற்படைத் தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 04வது பாடநெறிக்காக வரவேற்பு விரிவுரையை நிகழ்த்தினார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நான்காவது (04) தேசிய பாதுகாப்பு பாடநெறியில் பயிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ‘Role of Sri Lanka Navy in National Security’ என்ற தலைப்பில் 2025 நவம்பர் 03 ஆம் திகதி வரவேற்பு விரிவுரையை நிகழ்த்தினார். மேலும், அந்த சந்தர்ப்பத்தில், கடற்படைத் தளபதியை கௌரவிக்கும் வகையில் ‘Hall of Fame’ இல் கடற்படைத் தளபதியின் பெயரும் சேர்க்கப்பட்டது.

04 Nov 2025

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி குழுவின் தலைவர் கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதிக்கு பாப்பி மலரை அணிவித்தார்

வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட பாப்பி மலர் நினைவேந்தலுடன் இணைந்து, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பாப்பி மலர் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே (ஓய்வு), இன்று (2025 நவம்பர் 04) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு பாப்பி மலரை அணிவித்தார்.

04 Nov 2025

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகப்பூர்வ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவிலிருந்து புறப்பட்டது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இன்று (2025 அக்டோபர் 31) தீவை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.

01 Nov 2025

மேற்குக் கடலில் கூட்டு கடற்படைப் பயிற்சிகளால் இலங்கை-ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்பெற்றது

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுப் புறப்பட்ட ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO, இன்று (2025 அக்டோபர் 31) மேற்குக் கடலில் இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டது.

01 Nov 2025

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் நடைபெற்றது

2025 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படை கொடிக்கு ஆசிர்வாதம் பெறும் கொடி ஆசீர்வாத பூஜை மற்றும் கஞ்சுக பூஜை மகோற்சவம் 2025 நவம்பர் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் அனுராதபுரம் புனித பூமியில் கடற்படை பௌத்த சங்கத்தின் அனுசரணையில் வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் நடைபெற்றதுடன், இந்த நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனுஷா பானகொடவும் கலந்து கொண்டார்.

31 Oct 2025

புத்தளம், செம்புகுலிய குளத்தின் செயலிழந்த மதகை பழுதுபார்க்க கடற்படை சுழியோடிகளின் பங்களிப்பு

புத்தளம், மஹகும்புக்கடவல, செம்புக்குளிய குளத்தின் செயலிழந்த மதகை பழுதுபார்த்து புனரமைப்பதற்காக கடற்படையினர் 2025 அக்டோபர் 27 ஆம் திகதி சுழியோடிகளின் உதவியை வழங்கியது.

31 Oct 2025

கடற்படையின் பெருமைமிகு 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வயங்கொடையில் ஒரு சிறப்பு நடமாடும் பல் மருத்துவமனை சிகிச்சை

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் பல் மருத்துவமனை சிகிச்சை 2025 அக்டோபர் 26 ஆம் திகதி வேயங்கொடை சிறிசுமன அறநெறிப் பாடசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

31 Oct 2025

வணிக கடல் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து இலங்கை கடற்படைக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கையகப்படுத்தப்பட்டது

தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உள்ளூர் முகவர்களின் பாதுகாப்பு குழுக்களுக்கு கடற்படை சுயாதீனமாக வசதிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், வணிகக் கப்பல் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து பெறப்பட்ட முதல் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற பாகங்கள் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி காலி, பெட்டிகலவத்தவில் உள்ள வணிகக் கப்பல் பாதுகாப்பு குழு ஆயுதக் கிடங்கு வளாகத்தில் கடற்படையிடம் பாதுகாப்பாக சேமித்து வைக்க ஒப்படைக்கப்பட்டன.

31 Oct 2025