நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை இன்று (2025 ஜூலை 09) விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

09 Jul 2025

கடற்படை தலைமையகத்தில் தடைச்செய்யப்பட்ட விளையாட்டு ஊக்கமருந்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெற்றது

கடற்படை விளையாட்டு அணிகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள், விளையாட்டு பயிற்றுனர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தடைச்செய்யப்பட்ட விளையாட்டு ஊக்கமருந்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு பட்டறை 2025 ஜூலை 01 அன்று கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக கேட்போர் கூடத்தில் ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் மற்றும் தூய்மையான விளையாட்டு கல்வியாளர் ஊட்டச்சத்து பிரிவின் வளங்களுடன் நடைபெற்றது.

09 Jul 2025

இராணுவத் தளபதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, இன்று (2025 ஜூலை 08) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பும் இடம்பெற்றது.

08 Jul 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

‘நோயற்ற வாழ்வு - ஆரோக்கியமான மக்கள்’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்காக, கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், அனுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை பிரதேச செயலகத்தில், 571- நுவரவெவ, ஸ்ரீ சத்தர்மவன்ச விவேகாஸ்ரம விஹாரய வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு மையம் (01), 2025 ஜூலை 07 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.

08 Jul 2025

கடற்படையின் சமூகப் பணித் திட்டத் தி ன் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 03 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கலேபிடுனுவெவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துட்டுவெவ கட்டாரம்புர பாடசாலை மற்றும் உல்பத்வெவ ஆரண்ய சேனாசனம் ஆகிய இடங்களில் கடற்படையின்தொழில்நுட்ப பங்களிப்புடன், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜாமியுல் மில்ஃபார் ஜும்ஆ மஸ்ஜித் இஸ்லாம் பள்ளிவாசலில் மூன்று (03) கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு, 2025 ஜூலை 05 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

07 Jul 2025

இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் கௌரவ ரெமி லம்பர்ட் (Remi Lambert) தேசிய நீரியல் வல்லுநரும் கடற்படை நீரியல் துறைத் தலைவருமான தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவை 2025 ஜூலை 04 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்

06 Jul 2025

இலங்கை முப்படை மருத்துவ மாணவர் சங்கத்தின் 09 வது தலைவர் நியமித்தல் வெலிசரவில் நடைபெற்றது

இலங்கை முப்படை மருத்துவ மாணவர் சங்கத்தின் புதிய (09) தலைவரின் பதவியேற்பு விழா 2025 மே 20 ஆம் திகதி வெலிசரவில் உள்ள ‘வேவ் எண்ட் லேக்’ கடற்படை நிகழ்வு மண்டபத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஹர்ஷ குணசேகர அவர்களின் கௌரவ பங்கேற்புடன் நடைபெற்றது.

03 Jul 2025

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் புதிய தளபதியாக கொமடோர் தினேஷ் பண்டார பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் 41வது கட்டளை அதிகாரியாக கொமடோர் தினேஷ் பண்டார 2025 ஜூலை 02 ஆம் திகதி பொறுப்பேற்றார்.

03 Jul 2025

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை இன்று (2025 ஜூலை 02) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

02 Jul 2025

மீனவ சமூகத்தை பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை, கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி (Basic Life Support - BLS) பயிற்சித் திட்டத்தை 2025 ஜூன் 27 ஆம் திகதி திருகோணமலை மூதூர் மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

02 Jul 2025