நிகழ்வு-செய்தி
ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின் அதிகாரிகள் குழு ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்திற்காக கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
2025 பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையில் ஆய்வு விஜயத்திற்காக ருவண்டா பாதுகாப்பு சேவை ஆணை மற்றும் நிர்வாக கல்லூரியின், நிர்வாக பாடநெறியைப் படிக்கும் பதினைந்து (15) மாணவர் உத்தியோகத்தர்கள் மற்றும் நான்கு (04) கல்விப் பணியாளர்களை உள்ளடக்கிய கர்னல் LAUSANNE NSENGIMANA INGABIRE தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2025 பெப்ரவரி 11) ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர், அங்கு கர்னல் LAUSANNE NSENGIMANA INGABIRE மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்தித்தனர்.
11 Feb 2025
கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையின் அதிகாரியாக ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா பொறுப்பேற்றார்
கடற்படை கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையின் அதிகாரியாக, ரியர் அட்மிரல் இந்திக டி சில்வா இன்று (2025 பெப்ரவரி 10) திருகோணமலை கடற்படை தளத்தில், கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
10 Feb 2025
க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு
க்லீன் ஶ்ரீ லங்கா தேசியத் திட்டத்தின் கீழ் தீவைச் சுற்றியுள்ள கரையோரங்களைச் சுத்தப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" திட்டத்துடன் இணைந்து இன்று (2025 பெப்ரவரி 09) மேற்கு மற்றும் தென் பிராந்தியங்களில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரைச் சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு கடற்படை முழுமையாகப் தனது பங்களிப்பை வழங்கியது.
09 Feb 2025
இலங்கையின் இத்தாலிய தூதுவர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கையின் இத்தாலிய தூதுவர் Damiano Francovigh அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை இன்று (2025 பெப்ரவரி 07) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
07 Feb 2025
"அமான் - 2025" பலதரப்பு பயிற்சி ஆரம்பமாகிறது
பாகிஸ்தான் கடற்படையால் ஒன்பதாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பலதரப்பு பயிற்சியான AMAN-2025 இன் தொடக்க விழா இன்று (2025 பெப்ரவரி 07) பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கடற்படைத் துறைமுக வளாகத்தில் நடைபெற்றதுடன், இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகு கப்பலின் தளபதி மற்றும் ஏனைய கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.
07 Feb 2025
இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான ‘ANTONIO MARCEGLIA’ வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின் புறப்பட்டது
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 05 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இத்தாலிய கடற்படையின் 'ANTONIO MARCEGLIA' என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இலங்கை கடற்படை கப்பலான சயுரவுடன் கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 07) இலங்கையை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்
07 Feb 2025
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கெப்டன் YUKI YOKOHARI, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 பெப்ரவரி 07 அன்று உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
07 Feb 2025
கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ ஜனாதிபதியை சந்தித்தார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தளபதியுமான கௌரவ திரு அனுரகுமார திஸாநாயக்க அவர்களை சந்தித்தார்.
06 Feb 2025
க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பேர ஏரியை மறுசீரமைப்பதற்கு கடற்படையின் பங்களிப்பு
"வளமான நாடு - அழகான வாழ்வு" என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள க்லீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் ஏற்பாட்டில் பேர ஏரியை மாற்றுவதற்கான பூர்வாங்க செயற்திட்டம் இன்று (2025 பெப்ரவரி 06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக கடற்படை படகுகள் மற்றும் உழைப்பையும் வழங்க கடற்படை ஏற்பாடு செய்தது.
06 Feb 2025
இந்தியாவில் உள்ள நெமீபியா உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நெமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும், இலங்கையில் பாதுகாப்பு ஆலோசகராகவும் செயற்படும் கெப்டன் Lisias Kondjeni Kangandjela, இன்று (2025 பெப்ரவரி 05) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
06 Feb 2025