நிகழ்வு-செய்தி
“சயுரத சூரிய மாங்கல்யம் - 2025” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா சிதுரல கப்பலில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

இலங்கை கடற்படையினர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வணிக சேவை மற்றும் ஹரித தொலைக்காட்சி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “சயுரத சூரிய மாங்கல்யம் - 2025” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா 2025 ஏப்ரல் 14 ஆம் திகதி அன்று இலங்கை கடற்படை கப்பலான சிந்துரலவில் பாரம்பரிய ஹெல பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார கூறுகளுடன் நடைபெற்றது.
15 Apr 2025
கடற்படையால் முக்கியமான உடல்நலம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்தை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி திட்டம்

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தின் கீழ் சமூகத்தின் சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினரின் மூலம், கடலில் முக்கியமான சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு கல்வி கற்பிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு பயிற்சித் திட்டத்தை 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி அன்று வாழைச்சேனை மீன்வளத் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
15 Apr 2025
கடற்படை தாதியர் கல்லூரியில் 2024 தாதியர் பயிற்சியை முடித்த 34 தாதியர் மாணவர்கள் சேவைக்கு அர்ப்பணிப்பு உறுதிமொழி வழங்கினர்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கூட்டு சுகாதார அறிவியல் பீடத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் நிறுவப்பட்ட கடற்படை தாதியர் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பில் சேர்ந்த 34 இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தாதியர் மாணவர்களின் பதவியேற்பு விழா 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக் கேட்போர் கூடத்தில் கடற்படைத் தளபதியின் தலைமை அதகாரி ரியர் அத்மிரல் டேமியன் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
15 Apr 2025
பேராசிரியர் மருத்துவர் கொமடோர் (பல் மருத்துவம்) ஐ.டபிள்யூ.ஏ.பி.டி பலிபான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்

பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக, மறுசீரமைப்பு பல் மருத்துவப் பேராசிரியர் மற்றும் கடற்படை பல் சேவையின் வெளிப்புற ஆலோசகராகவும், பணியாற்றி வரும் மருத்துவர் கொமடோர் (பல்) ஐ.டபிள்யூ.ஏ.பி.டி பலிபான 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
15 Apr 2025
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029 வெளியீட்டு நிகழ்வில் கடற்படைத் தளபதி கலந்து பங்கேற்றார்

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் (National Anti-Corruption Action Plan- NACAP) ஜனாதிபதி கௌரவ அனுரக் குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் 2025 ஏப்ரல் 09 அன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றதுடன், இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதியும் பங்கேற்றார்.
11 Apr 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

மொனராகலை மாவட்டத்தின் ம மடுல்லவில் உள்ள அல்பிட்டிய கல்லூரி வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட் (Sunshine Foundation for Good) நிறுவனத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
11 Apr 2025
பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலயம் "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கான கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் பொத்துவில் அல்-கலாம் மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
09 Apr 2025
கடற்படை மூலம் அனர்த்த நிவாரணம் குறித்த சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம்

“கிளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படை 2025 ஏப்ரல் 05 முதல் 07 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையில் அனர்த்த நிவாரணம் குறித்த சமூக வலுவூட்டல் பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
09 Apr 2025
படைப்பு எழுத்துத் திறனைக் கடற்படைத் தளபதி பாராட்டினார்

லெப்டினன்ட் கமாண்டர் (C) ஆர்.ஏ.டி.டி ராஜபக்ஷவினால் சிறுகதைகளின் தொகுப்பை கடற்படைத் தளபதிக்கு வழங்கும் நிகழ்வு 2025 ஏப்ரல் 07 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
09 Apr 2025
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SAHYADRI’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது

2025 ஏப்ரல் 04 ஆம் திகதி அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் 'INS SAHYADRI' இன்று (2025 ஏப்ரல் 07) தீவை விட்டு புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர்.
07 Apr 2025