நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படைத் தளபதி இந்தோ-பசிபிக் கடல்சார் பாதுகாப்பு குறித்து 12வது பலதரப்பு கடல்சார் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்

அமெரிக்க கடற்படையின் பசிபிக் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதி அட்மிரல் ST Koehler நடத்திய 12வது பலதரப்பு கடல்சார் தலைமைத்துவ மாநாடு (12th Multilateral Maritime Virtual Key Leadership Engagement) 2025 ஜூன் 18 அன்று ஹவாயிலிருந்து நிகழ்நிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்திலிருந்து இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மாநாட்டில் பங்கேற்றார்.

19 Jun 2025

துருக்கிய குடியரசு கடற்படையின் 'TCG BÜYÜKADA' தனது உத்தியோகப்பூர்வ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவிலிருந்து புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த துருக்கியக் கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியின் பிறகு இன்று (2025 ஜூன் 18) தீவை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது.

19 Jun 2025

Culinary Art Food Expo 2025 கண்காட்சியில் கடற்படையின் பிரதிநிதித்துவத்தினால் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெறப்பட்டன

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற Culinary Art Food Expo 2025 கண்காட்சியில், Chief Petty Officer (ககா) டப்பிஏ சுபசிங்க பழங்கள் மற்றும் காய்கறி செதுக்குதல் பிரிவில் (Fruits and Vegetable Carving) தங்கப் பதக்கத்தையும், பனி செதுக்குதல் பிரிவில் (Ice carving) வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

18 Jun 2025

கடற்படைத் தளபதியின் தெற்கு கடற்படை கட்டளைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது செயல்பாட்டு நோக்கம் குறித்து விளக்கப்பட்டது

கடற்படைத் தளபதி, 2025 ஜூன் 15 அன்று தெற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான காவன்திஸ்ஸவின் செயல்பாட்டுத் தயார்நிலை, நிர்வாக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை ஆய்வு செய்து, நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

17 Jun 2025

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் திருகோணமலை மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன

கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல், சுற்றுலாத் துறைக்கு மற்றும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி, திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், அப்பகுதியில் உள்ள சட்ட அமலாக்க முகவர் மற்றும் கிழக்கு மாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2025 ஜூன் 13 ஆம் திகதி அன்று நடைபெற்றது.

16 Jun 2025

கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா 2025 மே 31 ஆம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் 2025 ஜூன் 12 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் சந்திம சில்வாவிடம் நியமனக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

15 Jun 2025

துருக்கிய கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்தது

துருக்கியக் கடற்படைக் கப்பலான 'TCG BÜYÜKADA' இன்று காலை (2025 ஜூன் 13) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்த நிலையில், இலங்கைக் கடற்படை குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

14 Jun 2025

கடற்படை வீரர்களுக்கு உள்நாட்டு விவகாரப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது

இலங்கை கடற்படைக்குள் நிறுவப்பட்ட உள்நாட்டு விவகாரப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த விரிவுரையொன்று, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால், 2025 ஜூன் 11 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

13 Jun 2025

கடற்படை இரத்ததானம் செய்யும் சமூகப்பணியில் ஈடுபட்டது

இலங்கை கடற்படையால் சமூக சேவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு இரத்த தான நிகழ்வானது 2025 ஜூன் 11 ஆம் திகதி பூஸ்சவில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் நிபுன நிறுவனத்தின் கடற்படை மருத்துவமனை வளாகத்திலும், யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் காஞ்சதேவ நிறுவன வளாகத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றது.

13 Jun 2025

இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை தன்வசப்படுத்தியதை உறுதிப்படுத்திய ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களுக்கு கடற்படைத் தளபதியின் பாராட்டுக்கள்

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) 2025 மார்ச் 09 ஆம் திகதி இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் (Manual Treadmill) 24 மணிநேரம் தொடர்ந்து நடந்து இரண்டு (02) உலக கின்னஸ் சாதனைகளைப் நிகழ்த்தியதுடன். அந்த கின்னஸ் உலக சாதனைக்கான உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் இலங்’கை கடற்படைக்கு கௌரவத்தையும் அபிமானத்தையும் பெற்றக் கொடுத்த்தனால் 2025 ஜூன் 12 ஆம் திகதி கடற்படைத் தளபதி தனது பாராட்டுகளை இலங்கை கடற்படை சார்பாக தெரிவித்தார்.

13 Jun 2025