நிகழ்வு-செய்தி
இலங்கையின் பெருமைமிக்க 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடற்படை 25 துப்பாக்கி சூட்டு வணக்கங்களை செலுத்தியது
இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்ட 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இலங்கை கடற்படை இன்று (2026 பெப்ரவரி 04,) மதியம் 1200 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவிலிருந்து தேசத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 25 துப்பாக்கிச் சூட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சயுரவின் கட்டளை அதிகாரி கெப்டன் கொன்ட் அன்னதுகொடவின் தலைமையில் இந்த மரியாதை செலுத்தப்பட்டது.
04 Feb 2026
கடற்படையால் நிறுவப்பட்ட 1148 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொலன்னறுவையில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அரலகங்வில கிராமத்தில் நிறுவப்பட்ட (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 29 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
01 Feb 2026
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. மேத்யூ டக்வொர்த் (Mr Matthew Duckworth), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2026 ஜனவரி 30 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.
31 Jan 2026
இலங்கை கடற்படையின் புதிய ஹைட்ரோமீட்டரின் பிரதானியாக ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன பதவியேற்றார்
இலங்கை கடற்படையின் ஹைட்ரோமீட்டர்களின் பிரதானியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, 2026 ஜனவரி 01 ஆம் திகதி இலங்கை கடற்படை நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் (SLNHS) பதவியேற்றார்.
31 Jan 2026
National Taekwondo Kyorugi Championship - 2026 இல் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றது
இலங்கை டேக்வாண்டோ கூட்டமைப்பு 2026 ஜனவரி 25 ஆம் திகதி ஏற்பாடு செய்த தேசிய National Taekwondo Kyorugi Championship - 2026 இல் கடற்படை சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி இரண்டு (02) தங்கப் பதக்கங்கள், மூன்று (03) வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் நான்கு (04) வெண்கலப் பதக்கங்களை வென்றது.
29 Jan 2026
Pre Command Training (PCT) XIV இந்தப் பாடநெறி திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைகிறது
இலங்கை கடற்படையின் போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு கடற்படை ஏவுதல் கட்டளையினால் நடத்தப்பட்ட பதினான்காவது (14வது) பயிற்சி வகுப்பு (Pre Command Training - PCT 02/2025) 2026 ஜனவரி 23 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சனா பானகொட தலைமையில் ஏவுகனைக் கட்டளை கொடி அதிகாரி கொமடோர் தனேஷ் பத்பேரிய அவர்களின் அழைப்பின் பேரில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
29 Jan 2026
Pre Command Training (PCT) XIV இந்தப் பாடநெறி திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைகிறது
இலங்கை கடற்படையின் போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு கடற்படை ஏவுதல் கட்டளையினால் நடத்தப்பட்ட பதினான்காவது (14வது) பயிற்சி வகுப்பு (Pre Command Training - PCT 02/2025) 2026 ஜனவரி 23 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சனா பானகொட தலைமையில் ஏவுகனைக் கட்டளை கொடி அதிகாரி கொமடோர் தனேஷ் பத்பேரிய அவர்களின் அழைப்பின் பேரில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
29 Jan 2026
“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ் காலி மீன்பிடி துறைமுக சுத்திகரிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ், காலி மீன்பிடி துறைமுகத்தில் சுத்தம் செய்யும் திட்டத்திற்கு கடற்படையின் சமூக பங்களிப்பு 2026 ஜனவரி 24 ஆம் திகதி வழங்கப்பட்டது.
27 Jan 2026
முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் கடற்படையின் இரத்த தான திட்டம்
கடற்படையின் மற்றொரு சமூக சேவை முயற்சியான இரத்த தான நிகழ்ச்சித்திட்டம் 2026 ஜனவரி 23 அன்று முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் கடற்படையினரால் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
26 Jan 2026
ரோயல் ஓமன் கடற்படைக் கப்பல் ‘AL SEEB’ விநியோக மற்றும் சேவை தேவைகளை முடித்த பிறகு தீவிலிருந்து புறப்பட்டது
விநியோக மற்றும் சேவை தேவைகளை மேற்கொள்வதற்காக 2026 ஜனவரி 22 ஆம் திகதி தீவை வந்தடைந்த ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான 'AL SEEB', 2026 ஜனவரி 24 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டது, மேலும் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அழித்தனர்.
26 Jan 2026


