இத்தாலி கடற்படைக்கு சொந்தமான ‘PPA MONTECUCCOLI’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்த இத்தாலி கடற்படைக்கு சொந்தமான ‘PPA MONTECUCCOLI’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாகுவுடன் இணைந்து நடத்திய கடற்படைப் பயிற்சியின் பின்னர், இன்று (2024 அக்டோபர் 13) இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது. புறப்பட்ட கப்பலுக்கு கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் பிரியாவிடை வழங்கினர்.

இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியில் (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கிடையே செய்திப் பரிமாற்றம் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே மரியாதை நிமித்தமான சந்திப்புகளை நடத்திய பிறகு குறித்த பயிற்சி முடிவடைந்தது.

'PPA MONTECUCCOLI' என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் கட்டளை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதிக்கு இடையில் மேற்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தில் 2024 அக்டோபர் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற்றது. மேலும் குறித்த கப்பலின் கடற்படையினர் சில சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றனர். மேலும், இரு கடற்படைகளுக்குமிடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கை கடற்படையினருக்கு கப்பலின் செயற்பாட்டுச் செயற்பாடுகளை அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுடன், இரு தரப்பினருக்கும் இடையில் புதிய அறிவும் அனுபவமும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மேலும், வெளிநாட்டு கடற்படைகளுக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும், மேலும் கப்பல்களின் வருகையுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் புதிய அறிவு மற்றும் அனுபவங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். பொதுவான கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் இந்த பரிமாற்றம் குறிப்பாகவும் சாதகமாகவும் இருக்கும்.